நான் என்னை தொலைத்து விட்டேன்.
என்னுடைய கருப்பு கட்டம் போட்ட நீல நிற மேலங்கியை காணவில்லை
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அரை மணித்தியாலம் ஆகியும் , வெளியே எடுத்த என் உடுப்புகளின் நடுவே,
விசர் பிடித்த மந்திபோல், மேலங்கியை காணாமல் குந்தி இருக்கிறேன்.
நான் இருந்த அறைக்குள் நுழைந்த என் மனைவி,
"என்ன தேடுகிறீர்கள்" என்றாள்.
மிகுந்த எரிச்சலுடன் " என்னை துலைத்து விட்டேன், அதனால் என்னை தேடுகிறேன்" என்றேன்.
சில வினாடிகள் மவுனத்தின் பின்,
"தொலைத்த பொருளை தொலைத்த இடத்தில் அல்லவா தேட வேண்டும்" என்றாள்.
"என்ன தொலைத்த இடம் தெரியுமா?" என்றேன் ஆவலுடன்.
"ஒ நல்லா தெரியுமே, நீங்கள் உங்களை என்னிடம் துலைத்து, முப்பது வருடங்கள் ஆகி விடனவே" என்றாள் நமட்டு சிரிப்புடன்.
"அட என் அறிவு களஞ்சியமே" என கட்டி அணைத்தேன் என்ன குள்ள அழகியை.
என்னுடைய கருப்பு கட்டம் போட்ட நீல நிற மேலங்கியை காணவில்லை
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அரை மணித்தியாலம் ஆகியும் , வெளியே எடுத்த என் உடுப்புகளின் நடுவே,
விசர் பிடித்த மந்திபோல், மேலங்கியை காணாமல் குந்தி இருக்கிறேன்.
நான் இருந்த அறைக்குள் நுழைந்த என் மனைவி,
"என்ன தேடுகிறீர்கள்" என்றாள்.
மிகுந்த எரிச்சலுடன் " என்னை துலைத்து விட்டேன், அதனால் என்னை தேடுகிறேன்" என்றேன்.
சில வினாடிகள் மவுனத்தின் பின்,
"தொலைத்த பொருளை தொலைத்த இடத்தில் அல்லவா தேட வேண்டும்" என்றாள்.
"என்ன தொலைத்த இடம் தெரியுமா?" என்றேன் ஆவலுடன்.
"ஒ நல்லா தெரியுமே, நீங்கள் உங்களை என்னிடம் துலைத்து, முப்பது வருடங்கள் ஆகி விடனவே" என்றாள் நமட்டு சிரிப்புடன்.
"அட என் அறிவு களஞ்சியமே" என கட்டி அணைத்தேன் என்ன குள்ள அழகியை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக